உள்ளூர் செய்திகள்

கோவையில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-28 14:41 IST   |   Update On 2023-06-28 14:41:00 IST
  • பேரணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
  • போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வால்பாறை,

உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வால்பாறை போலீஸ் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

வால்பாறை அரசு கல்லூரி நுழைவாயிலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி காந்தி சிலை, போஸ்ட் ஆபிஸ், அண்ணா சிலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News