உள்ளூர் செய்திகள்

மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய இளைஞர்கள்.

போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

Published On 2022-11-20 09:02 GMT   |   Update On 2022-11-20 09:02 GMT
  • சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
  • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று காலை சேலம் காந்தி ஸ்டேடியத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

இதை துணை கமிஷனர்கள் ராதா–கிருஷ்ணன், மாடசாமி, லாவண்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மினிமாரத்தான் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து 4 ரோடு, புதிய பஸ் நிலையம், ஏ.வி.ஆர் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News