உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மொபட் மீது வாகனம் மோதி டிரைவர் பலி

Published On 2023-01-10 08:54 GMT   |   Update On 2023-01-10 08:54 GMT
  • செல்வம் ஒரு பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
  • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வத்தின் மொபட் மீது மோதியது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வம்(வயது 48). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை வழக்கம்போல் மாணவ-மாணவிகளை வீடுகளில் இறக்கிவிட்டு மீண்டும் வேனை பள்ளியில் கொண்டு வந்து நிறுத்தினார். பின்னர் தனது மொபட்டில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.

திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News