உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிரைவர் கைது; டிராக்டர் பறிமுதல்
- போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் நாலுரோடு பகுதியில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. அதில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் குரவப்புலம் பகுதியை சேர்ந்த டிரைவர் அஜித்கு மார் (வயது27) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.