உள்ளூர் செய்திகள்

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகள், மின்கம்பம்.

அறுந்து விழுந்த மின்கம்பிகள்- சேதமான மின்கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

Published On 2022-10-06 09:45 GMT   |   Update On 2022-10-06 09:45 GMT
  • மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.
  • கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்களையும் மாற்ற வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துணை மின் நிலையத்துக்கு மேலப்பெருமழை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.முருகானந்தம் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்ப தாவது;-

திருத்துறைப்பூண்டி தாலுக்கா மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.

கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்கள் மாற்ற வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி மின் வாரியத்தில் 2021 ஆம் ஆண்டு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலப்பெருமழை ஊராட்சி முழுவதும் மின் கம்பிகளும் போஸ்ட் மரங்கள் 25-க்கு மேல் மின் கம்பிகள் 9420 மீட்டர் கம்பிகள் பழுதடைந்துள்ளது.

அந்த கம்பிகளை மாற்ற வேண்டும் .

அப்படி செய்தால் மட்டுமே எந்த உயிர் சேதமும் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News