உள்ளூர் செய்திகள்

இரட்டை கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - கிராம சபை கூட்டத்தில் மனு

Published On 2023-01-28 04:26 GMT   |   Update On 2023-01-28 04:26 GMT
  • மாவட்ட சத்துணவு மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவேந்திரன் கலந்து கொண்டார்.
  • கிராம பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கயம் :

காங்கயம் ஊராட்சி ஒன்றியம் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட சத்துணவு மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவேந்திரன் கலந்து கொண்டார்.

இதில் ஊராட்சிக்குட்பட்ட ரங்கம்பாளையத்தில் கடந்த 14.12. 2021 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு குழுவிற்கு மாற்றி உத்தரவிட கோரி பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அளித்த கோரிக்கை மனுவை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோரிக்கையை தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருககும் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம பொதுமக்கள் 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News