உள்ளூர் செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற தி.மு.க.வினர் தயாராக வேண்டும்-அமைச்சர் முத்துசாமி பேச்சு

Published On 2023-07-08 14:55 IST   |   Update On 2023-07-08 14:55:00 IST
  • செந்தில் பாலாஜி என்ன திட்டத்தை வகுத்துக் கொண்டு வந்தாரோ அதே பாணியில் தொய்வில்லாமல் நானும் செல்வேன்
  • 1000 பிரச்சினை நமக்குள் இருக்கலாம். ஆனால் அதனை மறந்து விட்டு, ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செயல்பட வேண்டும்.

கோவை,

கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கோவை பொறுப்பு அமைச்சரும் வீட்டு வசதி நகர் புறம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி தலைமை ஏற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு கோவைகாரர்கள் தான் முக்கிய காரணம். அவர்கள் அனைவருக்கும் நன்றி. செந்தில் பாலாஜி என்ன திட்டத்தை வகுத்துக் கொண்டு வந்தாரோ அதே பாணியில் தொய்வில்லாமல் நானும் செல்வேன். செந்தில் பாலாஜிக்கு இருக்கும் பிரச்சினை நீண்ட நாள் நீடிக்காது.

இந்தியா முழுவதும் முதல்-அமைச்சருக்கு நற்பெயர். கட்சி, அரசு, நாடு தழுவிய அரசியல் ஆகியவற்றை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் உள்ளார்.

1000 பிரச்சினை நமக்குள் இருக்கலாம். ஆனால் அதனை மறந்து விட்டு, ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செயல்பட வேண்டும். அந்த போட்டியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை போன்று, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றியை ஏற்படுத்தி கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அது நிச்சயம் நடக்கும்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரியை வெற்றியை பெற வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் நன்றாக உழைக்க வேண்டும்.

இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றேன். அங்கு மக்களின் பொது பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளேன்.

மாவட்டத்தில் நடந்து வரக்கூடிய திட்டங்கள் பற்றியும், அடுத்ததாக மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் கலெக்டரிடம் பேசுவேன்.

கவுன்சிலர்கள் உங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

இதில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா, மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News