உள்ளூர் செய்திகள்

ஆவுடையப்பன்

வள்ளியூர், திசையன்விளையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை -மாவட்ட செயலாளர் அறிக்கை

Published On 2023-01-07 09:40 GMT   |   Update On 2023-01-07 09:40 GMT
  • மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
  • இதில் இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை மாலை திசையன்விளை பேரூராட்சி, வள்ளியூர் பேரூராட்சி, ராதாபுரம் மேற்கு ஒன்றியம் இடிந்தகரை உள்ளிட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.

இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், நகர்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அதிக அளவு உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும். இதில் இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News