உள்ளூர் செய்திகள்

ஓசூர் பகுதியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-04-07 15:20 IST   |   Update On 2023-04-07 15:20:00 IST
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
  • மண்டல தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில்,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான ஆனந்தய்யா தலைமை தாங்கி முகாமினை தொடங்கிவைத்தார்.

மண்டல தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் தொகுதி பொறுப்பாளரும், கொள்கைபரப்பு குழு துணை செயலாளருமான வேலூர் ரமேஷ், விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

மேலும் இதில், கட்சியினர், மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News