உள்ளூர் செய்திகள்

ம.தி.மு.க தலைமை செயலாளர் துரை வைகோவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சி திருப்தி அளிக்கிறது- துரை வைகோ

Published On 2022-10-15 10:04 GMT   |   Update On 2022-10-15 10:04 GMT
  • நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன்.
  • கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

தரங்கம்பாடி :

மயிலாடுதுறையில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி ஏற்பாட்டின் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

இதில் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஆவணப் படத்தை கண்டு ரசித்தனர்.

பின்னர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

தி.மு.க.வின் ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன், ம.தி.மு.க நகர செயலாளர் மார்க்கெட் கணேசன், செம்பை ஒன்றிய செயலாளர் குளஞ்சிநாதன், மற்றும் கூட்டணி கட்சி பொருப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்.

Tags:    

Similar News