உள்ளூர் செய்திகள்

தலைஞாயிறு பகுதியில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யத்திற்கு வந்த தி.மு.க. இளைஞரணி பிரசார குழுவிற்கு வரவேற்பு

Published On 2023-11-22 09:28 GMT   |   Update On 2023-11-22 09:28 GMT
  • கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை தொடங்கி வைத்தார்.
  • வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, அவர் கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம் பகுதிக்கு வந்த தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பிரசார குழுவினருக்கு நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருான கவுதமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான புகழேந்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், தலைஞாயிறு பேரூர் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் துரை ராசு, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமோதரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரவிச்சந்திரன், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணி குழுவினருக்கு வழிநெடுகிலும் மேளதா ளங்கள் முழங்க, பட்டாசு வெடிக்கப்பட்டும், இனிப்பு வழங்கியும், மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்க ப்பட்டது.

Tags:    

Similar News