உள்ளூர் செய்திகள்

புதர்மண்டி காணப்படும் துணை சுகாதார மையம்.

போடி அருகே பயன்பாட்டுக்கு வராமல் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

Published On 2023-07-26 04:57 GMT   |   Update On 2023-07-26 04:57 GMT
  • முறையான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.
  • மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது கொட்டக்குடி கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்களது முக்கிய தொழில் விவசாயமாகும். இதனால் மலை கிரா மங்களில் தங்கி தோட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மருத்துவ வசதி இல்லாததால் குரங்கணி மற்றும் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

மேலும் போக்குவரத்து வசதியும் இல்லாததால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அரசு துணை சுகா தார மையம் கட்டப்பட்டது.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் இங்கு பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும் முைறயான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News