உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் பேரூராட்சியில் குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளுக்கு இணைப்பு துண்டிப்பு

Published On 2023-02-14 07:23 GMT   |   Update On 2023-02-14 07:23 GMT
  • மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
  • குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் 2022-23ம் ஆண்டிற்கான குடிநீர் வரியை ஏராளமான குடியிருப்பாளர்கள் செலுத்தவில்லை. இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை சொல்லியும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில் குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர். வருகிற 28-ந்தேதிக்குள் குடிநீர் கட்டண வரி செலுத்தாத அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News