உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி

Published On 2022-09-02 09:12 GMT   |   Update On 2022-09-02 09:12 GMT
  • மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்.
  • நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் அவசரகால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது. நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தமிழ்நாடு பார்வையாளர் உமா மகேஸ்வரராவ், திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓ. சங்கீதா, வலங்கைமான் பேரிடர் மீட்பு பார்வையாளர் விஜயன், வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், ரெட் கிராஸ் அமைப்பின் தேசிய பேரிடர் மீட்பு குழு பயிற்றுனர் பெஞ்சமின், ரெட் கிராஸ் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஏழுமலை, வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல், வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், எழுத்தர் வெக்காளிஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News