உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
திண்டுக்கல் புறநகர் பகுதியில் நாளை மின்தடை
- திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நல்லாம்பட்டி, பொன்னகரம், காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதிநகர், சமத்துவபுரம், வேடபட்டி,யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ஞானநந்தகிரிநகர், எம்.ஜி.ஆர்.நகர், மொட்டணம்பட்டி ரெயில்வேகேட், அந்தோணிநகர், மேட்டுப்பட்டி, சாமிக்கண்ணு தோட்டம்,
பாரதிநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.