உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் தர்ணா போராட்டம் நடந்தது.

தஞ்சையில், தர்ணா போராட்டம்

Published On 2023-08-25 10:19 GMT   |   Update On 2023-08-25 10:19 GMT
  • கூட்டுறவு வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • வங்கியின் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தஞ்சையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா்சம்மேளன துணைத் தலைவா்கோவிந்தன் தலைமை வகித்தாா்.

போரா ட்டத்தைத் தொடங்கி வைத்து ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா்.

இதில், நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வுதியம் வழங்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளின்படி கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அனைத்துத் தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியா்களின் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தாமதமின்றி நடத்த வேண்டும்.

வங்கி வாடிக்கையாளா்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.

நிறுத்திவைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டுதோறும் பணமாக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பணியாற்றும் ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாநிலச் செயலா் அன்பழகன் நிறைவுரையாற்றினாா்.

Tags:    

Similar News