உள்ளூர் செய்திகள்

சாய்பாபா பிறந்தநாளை முன்னிட்டு பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு

Published On 2023-03-30 12:34 GMT   |   Update On 2023-03-30 12:34 GMT
  • பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் ஜெயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ சாய்பாபா ஆலயம் ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலயத்தில் சாய்ராம் தியானம் கூடத்தில், சாய்பாபா பிறந்தநாள், ராம நவமியை முன்னிட்டு மூலவர் சாய்பாபாவை பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

மேலும் மூலவர் சாய்பாபாவிற்கு காக்கடர்த்தி, பாலாபிஷேகம் கலெக்டர் அபிஷேகம் துணி பூஜை மதிய ஆர்த்தி, சந்தியா ஆர்த்தி ஷோஜே ஆர்த்தி சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.

சர்வ சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

Similar News