உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

நெல்லை சந்திப்பில் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி

Published On 2023-09-22 09:11 GMT   |   Update On 2023-09-22 09:11 GMT
  • அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
  • நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.

நெல்லை:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கே சுமார் 120 வடமாநில பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்ட காரணத்தினால் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் சுகாதார தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கொண்டு கூட்டு துப்புரவு பணி மற்றும் தீவிர கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

இதற்காக கொசுப்புகை மருந்து வாகனம் மற்றும் 4 புகை மருந்து மூலம் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

டவுன் மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

டவுன் மண்டலத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

டவுன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு நடந்த முகாமில் டெங்கு பாதிப்பு குறித்து விளக்கி பேசினார்.

பின்னர் அவரது மேற்பார்வையில் 4 கொசு மருந்து எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது. டவுன் மார்க்கெட் பகுதிகள் முழுவதும், நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கட்டிட பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில்

மேஸ்திரி அருணாச்சலம், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் பரப்புரையாளர்கள் மாயாண்டி, சோமசுந்தரம், வேலு பிரபாகரன் மற்றும் பணியாளர்கள், பயிற்சி கல்லூரி மாண வர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News