உள்ளூர் செய்திகள்

வலங்கைமானில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வலங்கைமானில், ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-14 09:54 GMT   |   Update On 2023-08-14 09:54 GMT
  • கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலம்:

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கான தண்ணீரை விடுவிக்க வேண்டும், தண்ணீரின்றி கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் வலங்கைமானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகக்குழு ராஜா கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய பொருளாளர் மருதையன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தேவிகா மற்றும் உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News