உள்ளூர் செய்திகள்
மணல் கொள்ளையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
- மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
- ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆறுகளை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இன்று ஏ .ஐ. டி. யூ .சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்டத் தலைவர் சேவையா, மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்கத்தலைவர் முத்து உத்திராபதி நன்றி கூறினார்.