உள்ளூர் செய்திகள்

கவுரவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-28 15:52 IST   |   Update On 2023-03-28 15:52:00 IST
  • ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
  • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசுப் பணியும், ஜெகன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரண வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் பன்னியாண்டிகள் நலச்சங்கம் சார்பில், காதல் திருமணம் செய்த ஜெகனை படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர், அவர் சார்ந்த சமூகத்திற்குள் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக நடுரோட்டில் ஜெகனை ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் திருமணத்தை சகிக்காத பெண்ணின் தந்தை உறவினர்களுடன் சேர்ந்து மனிதநேயமற்ற வகையில் ஜெகனை நடுரோட்டில் ஆணவப் படுகொலை செய்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசுப் பணியும், ஜெகன் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணமும் வழங்குவதுடன், சாதி, மதம், இன வெறியுடன் இதுபோன்று நடைபெறும் ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இருதயராஜ், ரவி, நாராயணமூர்த்தி, மாவட்ட செயலாளர் நாகேஷ்பாபு ஆகியோகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லி பாபு, மாநில துணைத் தலைவர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

Tags:    

Similar News