உள்ளூர் செய்திகள்

காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

Published On 2023-05-04 09:20 GMT   |   Update On 2023-05-04 09:20 GMT
  • பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.
  • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர்.

கோவை,

கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது. காந்திபுரம் நகர பஸ் நிலையத்திற்கு உட்புறமும் வெளிப்புறமும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த டீக்கடைகள், செல்போன் கடைகள், செருப்புக்கடைகள், குளிர்பானக்கடைகள் என பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர். அப்போது கடையின் உரிமையாளர்கள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News