உள்ளூர் செய்திகள்

மோசடிகளால் மக்கள் ஏமாறுவதை தடுக்க ஆன்லைன் கார் விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை

Published On 2023-04-15 09:21 GMT   |   Update On 2023-04-15 09:21 GMT
  • கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
  • போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

நாமக்கல்:

தமிழ்நாடு கார் வியா பாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனம் சம்பந்தமான சான்றுகளுக்கு விண்ணப் பித்தால் மிகுந்த தாமதமா கிறது. இதை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவ தும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் போலியான விளம்பரத்தை நம்பி உபயோகப்ப டுத்தப்பட்ட காரை வாங்கு வதற்காக பணம் செலுத்தி ஏமாறு கின்றனர் .எனவே போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உபயோக படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா நடத்த வேண்டும். கார் மற்றும் வாகன வியாபார தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்க ணக்கான வாகன ஆலோ சகர்கள் ஆன்லைன் வர்த்த கத்தால் மிகவும் நலிவடைந்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு ஒரு நல வாரி யம் அமைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags:    

Similar News