செங்கோட்டையில் நவீன ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
- செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களுக்காக நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது
- செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்சின் சிறப்பை விளக்கி கூறினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடல் காந்திசிலை முன்பு செங்கோட்டை எம்.எம்.எம். டிரஸ்டின் நிறுவனர் கல்வியாளர் ரசப்காசியார் என்ற சம்சத் சார்பாக செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களுக்காக நவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ரியாஸ் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் நாகூர்மீரான் முகமதுஆரிப், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினா் சித்திக் வரவேற்று பேசினார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகையதீன் தொகுத்து வழங்கினார். இதில் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்சின் சிறப்பை விளக்கி கூறினார். டிரஸ்டின் துணை நிர்வாக இயக்குனா் லிங்கராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.