உள்ளூர் செய்திகள்
தாடிக்கொம்பு பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
- நாளை மறுநாள் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதூர், அழக்குவார்பட்டி, கள்ளிபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, கொண்டம நாயக்கன்பட்டி, மல்லணம்பட்டி, கோட்டூர் ஆவராம்பட்டி, அழகுபட்டி, கெச்சாணிபட்டி, விட்டல் நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.