உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடக்கும் காட்சி. 

கடலூரில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை

Published On 2022-09-21 07:52 GMT   |   Update On 2022-09-21 07:52 GMT
  • மருமகன் பெரிய செவலையை சேர்ந்த சுகனேஷ் கடந்த 18-ந் தேதி திடீர் என இறந்தார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

கடலூர்:

கடலூர் புதுநகர் போலீஸ் சரகம் கோண்டூர் கல்லூரி ஆசிரியர்நகரை சேர்ந்தவர் சீதாராமன். (வயது 60). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்கள். தற்போது ஊருக்கு திரும்பி உள்ளார். இவரது மருமகன் பெரிய செவலையை சேர்ந்த சுகனேஷ். இவர் கடந்த 18-ந் தேதி திடீர் என இறந்தார். இந்த இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான சீதாராமன் தனது குடும்பத்தினருடன் பெரியசெவலை சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று சீதாராமன் ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 19 பவுன் நகை, மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது கண்டு சீதாராமன் திடுக்கிட்டார். இதுகுறித்து சீதாராமன் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News