உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே கிரேன் மோதி பெண் பலி

Published On 2022-12-04 12:33 IST   |   Update On 2022-12-04 12:33:00 IST
  • நல்லூர்-விஜயநல்லூர் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கிரேன் குப்பம்மாள் மீது மோதியது.
  • கிரேனை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த நல்லூர் படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குப்பம்மாள் (70). இவர் நல்லூர்-விஜயநல்லூர் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த கிரேன் குப்பம்மாள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிரேனை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News