உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல்லில் பருத்தி வியாபாரி தற்கொலை

Published On 2022-09-26 07:45 GMT   |   Update On 2022-09-26 07:45 GMT
  • மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.
  • தனது வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

திண்டுக்கல்:

திண்டுக்கல் பழனி ரோடு நாட்டாண்மை கார தெருவை சேர்ந்தவர் அங்குச்சாமி (வயது 57). இவர் பருத்தி வியாபாரம் செய்து வந்தார்.

தனலட்சுமி என்ற மனைவியும், ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அங்குச்சாமி இன்று தனது வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News