உள்ளூர் செய்திகள்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

Published On 2023-06-17 13:33 IST   |   Update On 2023-06-17 13:33:00 IST
  • ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.
  • ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.

பாபநாசம்:

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 376 விவசாயிகள் தங்களது பருத்தியினன விற்பனறக்கூ டத்திற்குனை கொண்டு வந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வணிகர்கள், ஆந்திர மாநில வணிகர்கள் மொத்தம் 10 வணிகர்கள் இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர்.

விற்பனைக்குழு செயலாளர் சரசு, விவசாயி களிடம் பருத்தியினை நன்கு உலர வைத்து ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கேட்டுக் கொண்டார்.

இம்மறைமுக ஏலத்தில் 65 மெ.டன் அளவுள்ள ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பருத்தி யானது வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது.பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6,769 , குறைந்தபட்சமாக. ரூ.5,329, சராசரியாக ரூ.6,189-க்கும் விலை போனது.

மேலும் இம்மறைமுக ஏலத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி , விளம்பரம் மற்றும் பிரசார சித்தார்த்தன், அன்பரசு உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News