உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா

Published On 2022-06-25 10:10 GMT   |   Update On 2022-06-25 10:10 GMT
  • சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா.
  • கொரோனா தொற்று மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23-ந் தேதி தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

தொற்று பாதிபபு ஏற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே 48 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று 4 பேர் வீடு திரும்பினர். இதனால் மேலும் 55 பேர் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News