விவசாயிகளுக்கு புதிய நெல் ரக விதைகளை நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விவசாயிகளுக்கு மரபுசார் நெல் விதைகள்- எம்.எல்.ஏ. வழங்கினார்
- ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- விவசாயிகளுக்கு நெல் ஜெயராமனின் மரபுசார் பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி பேசினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமை வகித்தார்.
வேளாண்மை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், செம்பனார்கோயில் வட்டார உதவி இயக்குனர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடத்தை திறந்து வைத்து 10 -க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நெல் ஜெயராமனின் மரபுசார் பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி பேசினார்.
இதில் குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன், உதவி அலுவலர் உமாபசுபதி, ஜெயக்குமார், உதயசூரியன், திமுக. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், திருவிளையாட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா கண்ணன் மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.