உள்ளூர் செய்திகள்
- தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
- அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதால் சின்னசேலம் பகுதிகளான நயினார் பாளையம், குரால், தோட்டப்பாடி, பாக்கம்பா டி, எலவடி, கல்லாநத்தம், வாசுதேவணூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது காலையில் தொடங்கிய தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது சில தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது. இந்த மழையினால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். மழையின் காரணமாக சின்ன சேலத்தில் உள்ள முக்கிய சாலைகளான சேலம் மெயின் ரோடு, கடைவீதி, புதிய பேருந்து நிலையம், கூகையூர் ரோடு என அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.