போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர்அதிகாரிகள் ஆலோசனை
- காவல்துறையில் சீர்திருத்தம் தொடர்பாக அலுவலர்களுடன் விவாதம்
- போலீஸ் ஏ.டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்பு
கோவை,
மேற்கு மண்டல காவல்து றையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த பணிகள் குறித்த 5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனைக் கூட்டம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார்அகர்வால், முன்னாள் நீதிபதி செல்வம், முன்னாள் கலெக்டர் அலாவுதீன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர்கள் கிராந்திகுமார்பாடி, அருணா, கிறிஸ்துராஜ், ராஜகோபால்சுன்கரா, உமா, கார்மேகம், சராயு, சாந்தி, கோவை மாநகராட்சி கமிஷனர்பிரதாப், போலீஸ் கமிஷனர்கள் பால கிரு ஷ்ணன், பிரவீன்குமார் அபினபு, விஜயகுமாரி, மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்வரி, டி ஐ ஜி-க்கள் சரவணசுந்தர், ராஜேஸ்வரி, எஸ்.பி.க்கன் பத்ரி நாராயணன், பிரபாகர், சாமிநாதன், ஜவகர், அருண் கபிலன், ராஜேஷ் கண்ணன், ஸ்டீபன் ஜேசுபாதம், சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் காவல்து றையில் பணிநி யமனம், ஊதியம், பணிக ளுக்கான நெறிமுறை, மனஅழுத்தம், மனஉளை ச்சலை போக்குவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.