உள்ளூர் செய்திகள்

 கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தென்காசியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-15 08:59 GMT   |   Update On 2022-06-15 08:59 GMT
  • கட்டுமான பொருட்களான தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய கோரிக்கை

வீ.கே.புதூர்:

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் நல சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டுமான பொருட்களான மணல், எம்.சாண்ட், ஜல்லி, குண்டு கற்கள் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய வேண்டும்,

ஏற்கனவே செயல்பட்ட குவாரிகளை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News