உள்ளூர் செய்திகள்

கட்டிடத் தொழிலாளிக்கு கத்திக்குத்து

Published On 2023-09-11 07:47 GMT   |   Update On 2023-09-11 07:47 GMT
  • டீக்குடிக்க சென்ற போது பரிதாபம்
  • செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர்.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலத்தில் இன்று அதிகாலையில் டீக்குடிக்க சென்ற கட்டிடத் தொழிலாளியை மர்மநபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவில் வீதியில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கட்டிடப் பணியாளரான இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அதே வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி, செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் மார்பு, இடுப்பு, வயிறு பகுதியில் காயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்ய திட்டமிட்டனரா, அல்லது தொழில் போட்டியால் கொலை முயற்சி நடைபெற்றதா அல்லது குடும்பத் தகராறா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News