உள்ளூர் செய்திகள்

மரப்பலகையை அறுக்கும்போது கட்டிங் மிஷின் வெட்டியதில் கட்டிட தொழிலாளி சாவு

Published On 2023-08-24 14:53 IST   |   Update On 2023-08-24 14:53:00 IST
  • மரப்பலகையில் இருந்த ஆணியின் மீது மிஷின் மோதியதில் தென்ன ரசுவின் கையில் இருந்த கட்டிங் மிஷின் தாறுமாறாக ஓடியதில், அவரது கை மற்றும் கால், உடல்க ளில் வெட்டியது.
  • தென்னரசுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் சுண்டகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது40). கட்டிட தொழிலாளி.

இவர் நேற்று தனது மனைவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து மொ ரப்பூர் அருகே உள்ள எம். வெள்ளாளப் பட்டியைச் சேர்ந்த ராஜாமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டிட வேலைக்கு சென்றனர்.

அப்போது தென்னரசு கட்டிடத்திற்காக மரபல கையை கட்டிங் மிஷின் மூலம் அறுத்து கொண்டி ருந்தார்.

அப்போது அந்த மரப்பலகையில் இருந்த ஆணியின் மீது மிஷின் மோதியதில் தென்ன ரசுவின் கையில் இருந்த கட்டிங் மிஷின் தாறுமா றாக ஓடியதில், அவரது கை மற்றும் கால், உடல்க ளில் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த தென்னரசுவின் உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது.

இதனை கண்ட உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் பதறினர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு தென்னரசுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து தென்னரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத் தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News