உள்ளூர் செய்திகள்

விழாவில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டும் பணி

Published On 2022-10-05 09:32 GMT   |   Update On 2022-10-05 09:32 GMT
  • 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.

நாகப்பட்டினம், அக்.5-

நாகப்பட்டினம் நகராட்சியில் டாடா நகர் மற்றும் சேவா பாரதி பகுதிகளில், தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

விழாவில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர்.

இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம், நகராட்சி பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News