உள்ளூர் செய்திகள்

கடையநல்லூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 7 பவுன் நகை -ரூ.68 ஆயிரத்தை திருடிச் சென்றனர்

Published On 2023-05-26 09:02 GMT   |   Update On 2023-05-26 09:02 GMT
  • கிருஷ்ணவேணி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 68 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
  • தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்காக கண்ணன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வம்சவிருத்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 35). இவர் கடந்த 19-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ரூ. 68 ஆயிரம் திருட்டு

நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 68 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் (30) என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்காக கேரளாவுக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதால் அங்கு யாரும் இல்லை. இதனை அறிந்த மர்மநபர்கள் அங்கு புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவங்கள் தொடர்பான புகார்களின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே தெருவில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News