உள்ளூர் செய்திகள்
மீஞ்சூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- மீஞ்சூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மத்திய அரசு வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பாக மீஞ்சூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மத்திய அரசு வங்கி முன்பு முற்றுகை போராட்டம் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநில துணை தலைவர் டி எல் சதாசிவலிங்கம், நகர தலைவர் கார்த்திகேயன் துரைவேல் பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏலியம்பேடு மகேஷ் , வழக்கறிஞர் சம்பத், மகிளா காங்கிரஸ் ஜோதி சுதாகர், எழிலரசி, மீஞ்சூர் அருண் சோழவரம் கோவிந்தராஜ், ஏ ஐ டி யு சி மாநிலத் துணைத் தலைவர் எம்பி தாமோதரன், அத்திப்பட்டு சாய் சரவணன், ஆரணி சுகுமார், அத்திப்பட்டு புருஷோத்தமன், தீபக், சஞ்சய் காந்தி நந்தகுமார், மாநில பேச்சாளர் வில்சன், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.