உள்ளூர் செய்திகள்

பாளையில் காங்கிரஸ் நிர்வாகி மோட்டார் சைக்கிள் உடைப்பு-வாலிபர் கைது

Published On 2022-08-10 09:14 GMT   |   Update On 2022-08-10 09:14 GMT
  • பாளை காமராஜ்நகர் 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் டியூக்துரைராஜ் (வயது44). காங்கிரஸ் பிரமுகரான இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகளும் செய்து கொடுத்து வருகிறார்.
  • மோட்டார் சைக்கிள் உடைப்பு தொடர்பாக அவர் பாளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மரியராஜை கைது செய்தார்.

நெல்லை:

பாளை காமராஜ்நகர் 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் டியூக்துரைராஜ் (வயது44). காங்கிரஸ் பிரமுகரான இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகளும் செய்து கொடுத்து வருகிறார்.

இவரிடம் பாளை அண்ணா தெருவை சேர்ந்த மோசஸ் பிரபாகரன் என்ற பிரபு என்பவர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபு சம்பளம் வாங்குவதற்காக டியூக்துரைராஜின் வீட்டிற்கு சென்றார். அப்போது ஊதியம் தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து சென்ற பிரபு தனது நண்பரான நடுவக்குறிச்சியை சேர்ந்த மரியராஜ் மற்றும் சிலருடன் மீண்டும் செந்தில்நகரில் உள்ள டியூக்துரைராஜ் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த கும்பல் டியூக்துரைராஜை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக அவர் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மரியராஜை கைது செய்தார்.

மேலும் பிரபு மற்றும் அவரது மற்றொரு நண்பரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News