உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்.

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

Published On 2023-02-01 08:29 GMT   |   Update On 2023-02-01 08:29 GMT
  • ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
  • தப்பியோடிய சத்தியசீலனை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன்.

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சத்தியசீலன் தப்பியோடி விட்டார் அவரை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News