உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
- குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி, திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடையில் இருந்த குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.