உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கேரள அரசை கண்டித்து நவ. 1-ந் தேதி தமிழக விவசாயிகள் போராட்டம் டிஜிட்டல் ரீசர்வேக்கு எதிர்ப்பு

Published On 2022-10-27 10:46 IST   |   Update On 2022-10-27 10:46:00 IST
  • டிஜிட்டல் ரீசர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் கம்பம் மெட்டில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்துள்ளனர்.
  • இதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி களை சந்தித்து பேசி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடலூர்:

கேரள அரசால் நவம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ள டிஜிட்டல் ரீசர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் கம்பம் மெட்டில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

கேரளாவில் 14 மாவட்ட த்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கிராமங்களில் குளோபல் நேவிகேசன் சாட்டிலைட் சிஸ்டத்தின் மூலம் மறு சர்வே எனப்படும் ரீ சர்வே வருகிற நவம்பர் 1-ந் தேதி நடத்த உள்ளதாக அம்மாநில அரசு தெரி வித்துள்ளது.

இந்த மறு ஆய்வால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழக வன நிலங்கள் கூடுதலாக பறிபோகும் அபாயம் உள்ளது. எல்லை யோரங்களில் விவசாய நிலங்கள் வைத்திருக்கும் தமிழக விவசாயிகளின் நிலையும் மோசமாகும்.

இடுக்கி, பத்தினம்திட்டா, வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தமிழக எல்லையோரம் உள்ள 15 தாலுகாக்களில் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்த வேண்டும். இதற்கு முறையான வழி முறைகளை பின்பற்றி அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் தமிழக அரசு காலதாமதம் செய்தால் வருகிற நவம்பர் 1-ந் தேதி கம்பம் மெட்டில் முற்றுகை ேபாராட்டம் நடத்தப்படும் என்றார்.

ஏற்கனவே முல்லைப்பெ ரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய ஆவணபடம் தயாரித்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தமிழக விவாயிகள் போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்திருந்தனர்.

இதனிடையே மீண்டும் ஒரு பிரச்சினையாக கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே முறை தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக - கேரள எல்லையில் உள்ள 3 வழித்தடங்களிலும் போராட்டம் நடைபெறும் என்றும் இதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி களை சந்தித்து பேசி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News