உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து

Published On 2023-03-02 07:08 GMT   |   Update On 2023-03-02 07:08 GMT
  • கவுசிக் நேற்று இரவு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
  • அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென கவுசிக் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் கவுசிக் (வயது20). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென கவுசிக் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சுதாரித்து கொண்டு செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News