உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-05-18 14:39 IST   |   Update On 2023-05-18 14:55:00 IST
  • நேற்று கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
  • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தருமபுரி ,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் காரிமங்கலம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கடைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Similar News