உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2023-08-21 07:41 GMT   |   Update On 2023-08-21 07:41 GMT
  • தனுஷ் தயாநிதி சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
  • மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.

கடலூர்:

சிதம்பரம் சிவசிவா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் தனுஷ் தயாநிதி (வயது 22). இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு அருகில் ராம்நாத் என்பவரின் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.அப்போது அந்த இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை தனுஷ் தயாநிதி நிறுத்த சென்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து தனுஷ் தயாநிதியின் தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News