உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனியில் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2023-09-14 12:58 IST   |   Update On 2023-09-14 12:58:00 IST
  • குடும்ப தகராறில் வேதனையடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி விஸ்வதாஸ்காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மகள் காஞ்சனா(17). இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வந்தார். இவரை அதேபகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் இருகுடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி காஞ்சனா சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News