உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவன் மாயம் : தந்தை போலீசில் புகார்

Published On 2022-08-03 07:40 GMT   |   Update On 2022-08-03 07:40 GMT
  • கல்லூரி மாணவன் மாயமானதால் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
  • இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதியன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாக்கான்குடி அருகே உள்ள புளியங்குடி கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் இவரது மகன் ஆகாஷ் (18 ) , இவர் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ.படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதியன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இவரது தந்தை சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News