உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி கொலையா? என போலீசார் விசாரணை

Published On 2023-10-04 14:55 IST   |   Update On 2023-10-04 14:55:00 IST
  • புதுநகரை சேர்ந்தர் சக்திவேல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
  • இவரே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா?

கடலூர்:

பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள புதுநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயமாலா (வயது 40). கூலி தொழிலாளி. இவர்களது மகள் சக்தி (19) கல்லூரி மாணவி. இவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி சக்தி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது இவரே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News