உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் அத்துமீறல் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த கண்டக்டருக்கு அடி-உதை

Published On 2023-02-05 11:43 GMT   |   Update On 2023-02-05 11:43 GMT
  • பஸ்சை வழிமறித்து செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
  • மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பள்ளிப்பாளையம்:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது41). இவர் ஈரோட்டில் இருந்து குமாரபாளையத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சில், கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பஸ் பள்ளிப்பாளையம் வந்ததும், ஒரு மாணவி குமாரபாளையம் கல்லூரிக்கு செல்ல ஏறினார்.

பஸ் புறப்பட்டதும் அவரது காதை பிடித்து செல்லத்துரை திருகியுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாணவி தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த உறவினர்கள், ஒட்டமெத்தை பகுதியில் பஸ்சை வழிமறித்து, செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது, மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News